இவன்......

தேடிச்சோறு நினம் தின்னும் பாரதியின் வேடிக்கை மனிதர்களுள் இவனும் ஒருவன்.... இவனின் எண்ணகளும் அனுபவங்களும் நிகழ்வுகளும் நிறைந்த DIARY தான் இது என்று கூறி ஆரம்பித்துவிடலாம்... ஆனால் இதில் ஒரு நாசுக்கான நழுவல் இருப்பது சற்றே ஆழ்ந்த பார்வைக்கு புலப்பட்டுவிடும்...

'எனக்கு எதுவும் தெரியாது, ஏதோ என் மனதில்பட்ட கருத்தை இந்த சபைமுன்வைக்கிறேன்' என்று ஆரம்பித்து இவனின் சுய கருத்துக்களை சொல்லும் நாசுக்கு.... இவனின் கருத்துக்கள் பற்றி ஆதரவான விமர்சனம் வந்தால் வரவேற்கும் அதே சமயம் எதிர்மரையான விமர்சனங்கள் வரும்போது 'பாரதியின் வேடிக்கை மனிதன் தான் நான்...' என்று முன்னமே சொன்னதை கோடிட்டு நழுவிவிடலாம்.....

அப்படியானால் இவனை எப்படி படிப்பது என்று ஆரம்பதிலேயே கேள்விகளுடன் பயணிக்காமல் வெறுமையாய் புதியதாய் இவனுடன் பயணப்பாடுகள்....

'....பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே....' என்ற வேத வாக்கியங்களின் ராகசியகளும்.... மெக்சிகோ சலவைகாரி கதையும்.... சாலையில் சிகப்பு விளக்கை மதிகாதவனின் மேல் உள்ள கோபமும்.... தெருவோர தள்ளுவண்டி கடை கம்பங்கூலும்.... அதை குடிக்கையில் காலை உரசிய நாயில் வாஞ்சையும்... முரட்டு சுபாவத்தை தவிர்க்க முடியாத சக மனிதனின் உள்ளே புதைத்துள்ள பரிவும்.... காதலும்.... கவிதையும்.... காமமும்... சாக்கடையும்... பிணவாடையும்.... அருவருப்பும்... என எதுவும் இங்கு கிடைக்கலாம்..... நிதானமாக பயணியுகள்....

0 Response to "இவன்......"

Post a Comment