மாயை - பகுதி 2

பிரபஞ்சம் - பெயர் காரணம் தெரியுமா?
பிரம்மம் என்பது பஞ்சமாக பிரிந்திருப்பது பிர-பஞ்சம்...
பஞ்ச பூதங்கள்; நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். பிரபஞ்சத்தின் அனைத்தும் ஐந்து பூதங்களின் சேர்க்கையே, மனிதன் உட்பட.
நாம் ஒரு பஞ்ச பூத சேர்க்கைதான்... நிலம்- தசை, எலும்பு, போன்றவை. நீர் - ரத்தம், உமிழ் நீர், போன்றவை. நெருப்பு - உடலின் உஸ்ணம். காற்று - பரணன் முதலான வாயுட்கள். ஆகாயம் - மனம்!
இந்த ஆகாயம் மிக விசித்திரமானது. ஆகாயம் - space ; வெளி... நமக்கும் பக்கத்தில் இருப்பவர்க்கும் இடையில் இருபதும் வெளி தான், அண்ணாந்து பார்த்தல் எல்லை அற்று விரிந்து கிடப்பதும் வெளி தான்... என்றேனும் இரவில் தனிமையில் மல்லார்த்து படுத்து வானவெளியை பார்த்து வியந்ததுண்டா? இல்லையென்றால் இன்று இரவே முயற்சிசெயுங்கள்... எத்தனை நட்சத்திரங்கள்... நட்சத்திர மண்டலங்கள்... இவைகளின் மத்தியில் மாபெரும் நட்சத்திகளையே விழுங்கும் கருந்துளைகள்... பார்வைக்கு நட்சத்திரங்கள் அருகருகே இருப்பதாக தெரிந்தாலும், அவைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளி பல ஒளி ஆண்டுகள்.. ஒரு ஒளி ஆண்டு எவ்வளவு தெரியுமா? ஒளி துகள், ஒரு வினாடிக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்யும், அந்த வேகத்தில் ஒரு வருடம் பயணம் செய்தால் எத்தனை தூரமோ அது ஒரு ஒளி ஆண்டு தூரம்!! இப்படி 4 ஒளி ஆண்டு துரத்தில் தான் நம் சூரிய குடும்பத்தின் மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் இருக்கிறது!!! இவ்வளவு விஸ்தாரமான இந்த விண்ணிற்கு எல்லை இருக்கிறதா? அப்படி ஒரு எல்லை இருப்பின் அந்த எல்லைக்கு பின் என்ன இருக்கிறது? அப்படி ஒரு எல்லை இல்லை என்றால் அதை எப்படி என்று கற்பனையில் நினைத்து பாருங்கள்!!!
செயற்கை கோல், அதி நவீன தொலைநோக்கி என்றெல்லாம் பல சாதனங்களை வைத்து விஞ்ஞானம் தேடிகொண்டிருகிறது... பிரபஞ்சம் தோன்றிய கணத்திலிருந்து இப்போது வரை கண்டுபிடிதுவைதிருகிறார்கள்... இன்னும் பிரபஞ்சம் தோன்றிய கணத்தையும், அதற்க்கு முன் என்ன என்பதற்கும் இன்னும் பதில் இல்லை!!
இந்த ஆகாசத்தின் ரகசியம் இன்னும் மனிதனால் புரிந்துகொள்ள முடியவில்லை... அதன் எல்லைகளை அறுதியிட முடியவில்லை... மனிதனின் மூளையைபோல!! இன்னும் நம் மூளையை நொண்டிக்கொண்டே இருகிறார்கள்... இங்கு தொட்டால் மூளையின் இந்த பகுதி சிலிர்கிறது.. இதை பார்த்தல் இந்த பகுதி விரிகிறது என்றெல்லாம் தினமும் கண்டுபிடிக்கிறார்கள்... மனம் என்பது எங்கே இருக்கிறது என்று தேடுகிறார்கள்... சுலபமாக சொல்லுகிறோம், 'மனமார வாழ்த்துகிறேன்' என்று, ஆனால் அந்த மனம் நம் உடலில் எங்கு இருக்கிறது என்று யோசித்து பார்த்துண்டா?
மனம் நம்ம மூளைதான்... அதை நம்மால் உணரமுடியததர்ற்கு காரணம், நம் மூளைக்கு உணர்ச்சி இல்லை!! உணர்வற்ற ஒன்னறை அறுதியிட்டு இங்கு இருக்கிறது என்று சொல்ல இயலாது... கை கால் உணர்ச்சி அற்றவர்களை கேட்டு பாருங்கள் புரியும்... மூளைதான் சகலமும்... சகர்ஸ்ரதலம்... ஆயரம் இதழ் கொண்ட தாமரை!! குண்டலனி பற்றி என்றேனும் சொல்லும்போது இதை பற்றி பேசலாம்....
ஆகாசதிற்கு வருவோம். மாயையை பற்றி பெசிகொண்டிருகும்போது எதற்கு ஆகாசம் என்று நினைக்கலாம். இந்த விளக்கம் பின்னர் தேவைபடலாம் என்பதற்காக சொல்லிகொண்டிருக்கிறேன், தேவை இல்லாமலும் போகலாம்!!
மனமேதான் ஆகாசம்... ஆகாசம்தான் மனம்...
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்... பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்....
அகம் பிரம்மாஸ்மி...

மாயை - பகுதி 1

இதை எழுதுவதற்கு சில கணங்களுக்கு முன் வெளியே உலாவிகொண்டிருந்தேன்.
மாலை பொழுதின் கடைசி நிமிடங்கள்....
வளர்பிறை நிலவின் வெளிச்சத்தை மெல்லிய மேகதிடல்கள் தடுக்க போராடி தொற்றுகொண்டிருந்தது...
'மங்கியதோர் நிலவினிலே...' என்ற பாரதியின் வரிகள் நினைவை வருடியது...
மிக மெல்லிய மழை சாரலில், காற்றில் குளுமை கூடியிருந்தது...
வீட்டின் பின்புறம் ஜாதி முல்லை கொடி ஒன்று உண்டு. கொடி முழுக்க பூக்கள் சின்னதாய் சிரிக்க துவங்கியிருந்தது. முல்லை கொடியின் கரும்பச்சை இலைகள், மெல்லிய இருளில் இன்னும் இருட்டாய் தெரிய, அதன் மீது சிறிய முத்துக்களாய் இந்த பூக்களை பார்ப்பதற்கு, வானத்து நட்சத்திரங்கள் தரையில் சிதறிக்கிடப்பதுபோல் இருந்தது...
பூக்க துவங்கிய முல்லையின் வாசமும் வீச துவங்கியது அந்த நிமிடத்தை இன்னும் பரவசப்படுதியது...
எத்தனை அழகான மாலைபொழுது...
இந்த காட்சி, வாசம், நிலவொளி, தென்றல், எல்லாம் மாயை என்றால் ஒப்புகொள்ளமுடியுமா!!!
இது மட்டுமல்ல, இதோ இந்த வார்த்தைகள், அவற்றை உங்களுக்கு காட்டும் இந்த கணினி, அமர்ந்திருக்கும் நாற்காலி, இதை எழுதும் நான், படித்துகொண்டிருக்கும் நீங்கள், யாவும் மாயை என்றால் நம்புவீர்கள!!!
எப்படி நம்புவது!!
இதோ என் காதல் மனைவி, ஆசை குழந்தைகள், அவர்களின் மழலை, இவை எல்லாம் என் முன் விரிந்திருக்கும் சுவர்க்கம்... இவை எப்படி மாயை என்பேன், என்று ஆனானப்பட்ட பாரதியே "நிற்பதுவே நடபதுவே...." என்று பாடினார்....
அந்த வரிகள் நினைவில் இருக்கிறதா?! ".....வானகமே இளவெயிலே மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின்நீரோ? வெறும் காட்சிப்பிழைதானோ? போனதெல்லாம் கனவினைபோல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?...."
இப்படி பாரதியே நம்ப மறுத்த இந்த மாயை, ஒரு நிதர்சன உண்மையே!!!