ஜெய் பாதாள பைரவி......

சாயா விருட்ச பட்டை, வேர், பூ, பிசின் இவைகளைக் கொண்டு வந்து நிழலில் பாடமாய் உலர்த்தி இடித்து தூள் செய்து துணியில் வஸ்திரகாயம் செய்து பத்திரபடுதவும். இதை திரிகடிப் பிரமானம்தேனில் குழைத்து காலை மாலை இருவேளையும் சாபிட்டால், நாற்பது நாட்களில் காயசித்தியாகும்!!!! உடலை கத்தியால் வெட்டினால் பிரிந்து கூடும்!!! சாவு கிடையாது!!! இதன் பட்டை வேர் எடுப்பதற்கு முன் அந்த மரத்தடியில் இருந்து ஏழு நாள் வடுக பைரவ மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.....

இன்னும் இதன் பட்டை வேர் இவைகளை நிழலில் உலர்த்தி குழித்தைலம் இறக்கி வைத்துக்கொண்டு கருங்குருவி பிச்சு, கண், கரும்பூணை பிச்சு, கண், இவைகளை சுருக்கி கல்வத்திலிட்டு, பச்சை கர்பூராம், புனுகு, கஸ்தூரி, குங்குமப்பூ, இவைகள் வகைக்கு ஒரு குன்றி மணி எடை சேர்த்து தைலம் விட்டரைத்து திலகமிட்டாள் நமது உருவம் பிறர் கண்களுக்கு தெரியாது!!!!! வெற்றிலையில் தடவி பார்த்தல் முன்று காலமும் அறியலாம்!!!!!

ஒரு முள்ளொயை (அப்படி என்றால்???) பிடித்து அதன் வாயினுள் பாதரசம் ஒரு பாலம் விட்டு வாயை தைத்து சிலை மண் செய்து புதைத்து நாற்பது நாள் சென்றபின் எடுத்து பிரித்தால் ரசம் கட்டி மணியாகும். பின் பூ நாகம் அரைத்து மணிக்கு கவசம் செய்து பத்து எருவில் பத்து புடம் போட்டால் பிரகாசமுள்ள மணியாகும். இதை வாயில் அடக்கி வைத்துக்கொண்டு போகித்தால் விந்து விழாது!!!! எத்தனை பெண்களை போகித்தலும் விந்து விழாது!!!!!!

இது பரவாயில்லை...... அம்மாவாசை, அனுச நட்சத்திரம் அப்புறம் இனும் ஏதோ கூடி வரும் நாளில் கருங்கழுதையை கொன்று (பாவம்....) தலையை உடைத்து பார்த்தல் ஒரு கல் இருக்குமாம்!!! மற்றநாளில் மண்டையை உடைத்தால் கல் இருக்காதாம்!!!! அதை வாயில் அடக்கிக்கொண்டால் நாம் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்துபோவோமாம்!!!! அந்த கல்லை தாமிர டப்பியில் தான் வைக்கவேண்டுமாம் இல்லாவிட்டால் அந்த கல்லே கண்ணனுக்கு தெரியாதாம்!!!!

இதே போல் இனொரு நாள், இனொரு நட்சத்திரம் அன்று காட்டுபூனையின் தலையை உடைத்தால் கிடைக்கும் கல்லை வாயில் வைத்துகொண்டால் பூனையாகிவிடுவோமாம்!!!!!


இன்று முட்டாள்கள் தினம் என்பதால் இது எல்லாம் ஏதோ உங்களை முட்டாளாக சொல்கிறேன் என்று நினைகாதீர்கள்...... படிக்க புதியதாய் புத்தகங்கள் வாங்க சென்றபோது கண்ணில் பட்ட சில புத்தகங்களில் இருந்தவைகள் இவை.... மை வித்தைகள், வசிய ரகசியகள், ரசவாத மூலிகைகள், இந்த்ர ஜால விதைகள் என்று நிறைய இது போன்ற புத்தகங்கள் கிடைக்கின்றன.... எல்லாம் விலை ஐம்பதிற்குள்தான்.... இவ்வளவு குறைந்த விலையில் தேவதாவிசயம் முதல் ரசவாதம்வரை அனைத்து ரகசியங்களும் கிடைக்கின்றது....



தங்கம் செய்யும் ரகசியங்கள் நிறைந்த ''போகர் 5000'' என்ற நூலை அரசு தடை செய்திருப்பதாக அறிந்தேன்......



இவைகளில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை...... எனக்கு தெரிந்த சித்தவைத்தியர் ஒருவரிடம் இது பற்றி விசாரித்தேன், "நிதானமாக ஒரு நாள் எனக்கு தெரிந்த ரகசியகளை சொல்கிறேன்'' என்றார்..... அவர் சொல்லட்டும், உங்களுக்கும் சொல்கிறேன்....... இன்னும்கூட இதை பற்றி ஆராயவேண்டும்......