கடவுளை தேடி...... - 1

கடவுளை தேடி....

இதை பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று ஆரம்பித்ததுதான் இந்த 'எவனோ ஒருவனின் டைரி'. ஆனால் எங்கெங்கோ பயணம் செய்துகொண்டிறுகிறேன்...
இனியேனும் இதிப்பற்றி மட்டும் எழுதலாம் என்று ஆயதம் ஆயிருக்கிறேன்..
பார்ப்போம்...

போகிற போக்கில் ஒரு கதை சொல்கிறேன்...

விரிவான கதை இல்லை... கதை சுருக்கம்... இல்லை... கதை சாரம்.... எதுவோ ஒன்று...

பூமியில் வாழும் மனிதர்களை விட அறிவிலும் ஆற்றலிலும் மேலான, விண்ணில் ஏதோ ஒரு கிரகத்தில் வாழும் மனிதர்கள் நம் பூமிக்கு வந்தார்கள். அவர்களால் பூமியில் பல நன்மைகள் விளைந்தன. அவர்கள் நம்மவர்களுக்கு பல விதத்தில் உதவிகள் புரிந்தனர். பல நல்ல விசயங்களை போதித்தனர். இருபினும் அவர்கள் நம்மை அடிமை படுத்தி ஆளவேண்டும் என்று நினைக்கவில்லை.

நம்மை ஆள்வதோ, நம் தேவைகளோ, நமது பூமியோ அவர்களுக்கு அற்பமாக இருக்கலாம், அதனால் நமிடம் இருந்து அவர்கள் எதையும் எதிர்பார்கவில்லை. இந்த செயல்கள் அவர்களை, கடவுள் அளவிற்கு உயர்த்தி வைத்தது. அவர்களின் உடல் அமைப்பும் நம் மனிதர்களின் உடல் அமைப்பை ஒத்திருந்ததால், பலர் அவர்களுக்கு தங்கள் பெண்களை மணமுடித்தும் வைத்தனர்.

அவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள், பறக்கும் வாகனங்கள், யாவும் நம்மவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தின. இவைகளுக்கு மேல் அவர்களுக்கு நம் மனதில் நினைப்பதை படிக்கும் ஆற்றலும் இருந்தது. இது அவர்களின் மேல் இன்னும் பயம் கலந்த மரியாதையை உருவாகியது.

அவர்கள் நம் பூமிக்கு வந்து சென்றனரே தவிர அவர்கள தங்குவதற்கு ஏதுவான வசிப்பிடமாக நினைக்கவில்லை. இப்படியாக காலம் நகர்ந்துகொண்டு இருக்க.
ஒருநாள், விண்ணில் புதிதாக மூன்று விண்வெளி ஓடங்கள் மிதந்துகொண்டிருந்தது. ஒவ்வொன்றும் மலை போன்ற பெரிதாய். தங்க நிறத்தில் ஒன்று, வெண்மையாய் வெள்ளி போன்று ஒன்று, மற்றொன்று கருமையாய்.

அந்த விண்வெளி ஓடங்களில் இருந்து விகாரமாய், முரட்டுதனமான சில மனிதர்கள் பூமிக்கு வந்து இறங்கினார்கள். இவர்கள் கொடுமைக்காரர்கள், மற்ற கிரகவாசிகளை அழித்தோ, அடிமை செய்தோ அந்த கிரகத்தை தம் கட்டுபடிற்குள் கொண்டுவந்துவிடுவார்கள். இவர்களிடதும் அதி நவீன ஆயுதங்களும், ஒளியை விட வேகமாக செல்லும் வாகனங்களும் உண்டு. இவர்கள் போன்றவர்களும் விண்வெளியில் இருகிறார்கள் என்று நமவர்களுக்கு முனமே தெரியும், ஆனால் இப்படி எதிர்பாராமல் வருவார்கள் என்று நினைக்கவில்லை.

வந்தவர்கள் நேரடியாக தாக்குதலில் இறங்கினார்கள். அவர்களின் ஆயுதங்களுக்கு முன்னே நம் ஆயுதங்கள், ஈடிகளுக்கு முன் குண்டூசிகள் போல் இருந்தது. விரட்டி அடிக்க பட்டோம். இவர்களுடன் மோத, இவர்களுக்கு சம பலம் பொருந்திய, நமக்கு உதவும் இனொரு வெற்றுக்ரக வாசிகளால்தான் முடியும் என்று அவர்களை தொடர்பு கொண்டனர்.

முதலில் அவர்களின் ஒரு படை வந்தது. அவர்களுடன் நம் மனிதர்களும் இனைந்து மோதல் வெடித்தது. இருந்தும் நம்மவர்களால் அவர்களின் வெறி தாக்குதலை தாக்குபிடிக்க முடியவில்லை. நமக்கு உதவ வந்த வெற்றுக்ரகவாசிகளும் பின்வாங்கினர்

பின்வங்கியவர்கள், அவர்களின் தலைவரிடம் முறையிட்டனர்... அவர்களின் தலைவர் அதிநவீன, அதீத சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் வந்தார், சிறு புனுருவளுடன் ஏதோ ஒரு 'button' ஐ அழுத்தி அந்த மூன்று ஓடங்கலையும் அளித்தார்... உலகமே அவரை கொண்டாடியது....

எங்கேயோ கேட்ட கதை போல் உள்ளதா??

இது நம் சிவபெருமான், முப்புரங்களை அழித்த கதைதான்...

இதை போல் அணைத்து புராண, இதிகாசங்களுக்கும் ஒரு 'alien' விளக்கம் சொல்கிறார், Eric von danican என்னும் ஜெர்மனியர்..

தேடுதல் தொடரும்...

1 Response to "கடவுளை தேடி...... - 1"

  1. Shakthiprabha (Prabha Sridhar) says:
    December 3, 2011 at 9:24 PM

    தொடருங்கள்.

    //
    இதை பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று ஆரம்பித்ததுதான் இந்த 'எவனோ ஒருவனின் டைரி'.
    //

    உங்களை நான் தொடர்வதற்கும் இது முதல் காரணம்.

Post a Comment