தியானம்

நன்றி, இன்றும் நான் ஏதும் எழுதி இருகிறேனா என்று பார்த்துகொண்டு இருக்கும் நண்பர்களுக்கு நன்றி.

ஆன்மிகம் பற்றி பேசி நாட்கள் ஆகிவிட்டன, எனவே இன்று தியானம் பற்றி கொஞ்சம் பேசலாம்.

மனதை ஒரு புள்ளியில் ஒருமுகப்படுத்துவது என்று பொதுவாக சொல்லப்படும் தியானம், அப்படியானது அல்ல!! ஏதோ எழுத்து சிதார் ஆனபின் பாலகுமாரன் பேசுவது போல ஆரம்பிகக்கிறேனா!!

சுலபமாக தியானம் கைகூட கற்று தருகிறேன்.

அதற்க்கு முன், உங்களுக்கு தெரிந்திருந்தாலும் தியானத்தை பற்றி சில விசயங்கள்.

தியானம் சற்று ஆழமாக போகும் நிமிடங்களில் உங்களின் சுவாசம் மிகவும் மேலிதாகிறது, அரிதாக சிலசமயம் நின்றுகூட போவதுண்டு. நம் சுவாசத்திர்க்கும் மனதிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. உதாரணதிற்கு, நீங்கள் கோபமாக இருக்கும் சமயங்களில் உங்கள் சுவாசம் நிதானம் இன்றி படபடபாகவும், அமைதியான பொழுதுகளில் லேசாகவும் இருப்பதை பார்க்கலாம்.

ப்ராணாயமம் ஆரம்ப பயிற்சிகள் சுவாசத்தை கட்டுபடுதுவதர்கானது. அவைகளைகொண்டுதான் இன்று பெரும்பாலான ஆசரமங்களின் பிழைப்பு ஓட்டிகொண்டிருகிறது. தினமும் காலையில் சில நிமிடங்கள் நம் சுவாசத்தை கவனித்து அதை ஒரு தாள கதியில் இயக்கிவிட்டால், பெரும்பாலும் அந்த இயக்கம் அந்த நாள் முழுவதும் தொடர்கிறது. இது நம் மனதை நிதானத்தில் வைக்கிறது. நிதானமாக இருக்கும் மனம் தெளிவாக முடிவெடுக்கும். இதே போல் மனதை நிதானத்திற்கு கொண்டுவரும் சூட்சுமத்தை கோயில்கள் உள்ளடக்கி இருக்கின்றன. அது வேறு formula. ப்ரனாயமத்தையும் கோயிலையும் தவிர்த்து தினத்திற்கு வருகிறேன்.

மனதை ஒரு புள்ளியில் நிறுத்துவதென்பது கேட்பதற்கு நன்றாக இருக்குமோ தவிர, செய்வதற்கு முடியாதது.

எனவே முதலில் எங்கெங்கோ அலைபாயும் நம் மனதை நம் உடலில் நிறுத்தும் பயிற்சியில் ஆரம்பிக்கவேண்டும்.

சௌகர்யமாக மல்லாக்க நீட்டி படுதுகொல்லுகள் (இதற்க்கு சுகாசனம் என்று பெயர், யோகாசனம் கற்றவர்கள் சுகாசனம் அப்படி அல்ல என்று சொன்னால் அதை காதில் வாங்கிகொல்லாதீர்கள்) கை கால்களை தளர்திகொளுங்கள். எந்த அசௌகரியமும் இருக்ககூடாது.

கண்களை மூடிக்கொண்டு உங்கள் கால் கட்டை விரல் எப்படி இருக்கும் என்று மனதிற்குள் பாருங்கள். விரல், நகம், உள்ளே எலும்பு, சதை, நரம்பு, இப்படி கொஞ்சம் ஆழமாக பாருங்கள். இதற்க்கு அனாடமி எல்லாம் படிக்க வேண்டாம், உங்களுக்கு தெரிந்தவரை உள்ளே செல்லுங்கள். இரண்டு கால்களின் கட்டை விரலில் ஆரம்பித்து பாதம், கண்ணுகால், முழங்கால், தொடை, என்று அப்படியே தலை முடி வரை நிதானமாக உங்களை நீங்களே scane செய்வது போல பாருங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறும், பெரும்பாலும் தூங்கிவிடுவீர்கள் கொஞ்சமாய் சிரத்தை எடுத்தால் நிச்சயம் முடியை தொட்டுவிடலாம்!

முடியை தொட்டதும் நீங்கள் உங்களின் உடலுக்குள்ளே தங்கியிருப்பதை உணரமுடியும்.

இந்த பயிற்சியால் நிகழும் இனொரு நிகழ்வையும் சொல்லிவிடுகிறேன். நாம் மனதால் நம் உடலை பார்க்கும் இடத்தில் ரத்தம் அதிகம் பாய்கிறது. இன்னும் நுணுக்கமாக சொல்லவேண்டுமானால், நாம் பார்க்கும் பகுதியில் இளஞ்சூடு உருவாகி நரம்புகளை லேசாக விரிவடைய செய்கிறது. ரத்தம் அதிகம் பாய்கிறது. இதனால் நரம்பு, இதயம் சம்பந்தமான வியாதிகள் நம்மை நெருங்காது. சில மகான்கள் தம் பார்வையாலேயே அடுத்தவர் உடலில் இப்படி மாற்றங்களை நிகழ்த்துவார்கள். அது வேறு பயிற்சி!! நோக்கு வர்மம் பற்றி தேடினால் அது புரியும்.

நண்பர்களே, இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து சுலபமாக உங்களின் உடலில் மனதை நிறுத்தும் வித்தையை சாதிய படுத்திய பின் அடுத்த தளத்தை காட்டுகிறேன்

1 Response to "தியானம்"

  1. Anonymous Says:
    October 5, 2010 at 12:37 PM

    இன்றைய டாப் பிரபல வலைப்பதிவுகள் www.sinhacity.com இல்

Post a Comment