வாசியுங்கள் நண்பர்களே...

புதிதாக ஜன்னலை திறக்கின்றேன், கதவை திறக்கின்றேன் என்றெல்லாம் சொன்னது வெறும் பிரசவ வைராகியம் ஆகிவிட்டது...
இனி இப்படி தினப்படி எழுதுகிறேன் என்றெல்லாம் வாக்கு குடுப்பதாக இல்லை...
நான் சொன்னது போல் எழுத மட்டும்தான் இல்லை, தவிர சொன்னபடி புத்தகங்களை படிப்பதை பழையபடி ஆரம்பித்துவிட்டேன் - இது இனி எத்தனை நாள் என்று நினைக்கவேண்டாம்..!!

படிப்பதை உங்களுக்கும் வழிமொழிகிறேன். அனைவரும் கண்டிப்பாக புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை வளர்த்துகொளுங்கள். கிடைப்பதை படியுங்கள். இன்னது என்று தேடாதீர்கள், நீங்கள் பசியுடன் படிக்க ஆரம்பித்தலே போதும், உங்களுக்கான புத்தகங்கள் உங்களை தேடிவரும். நம்புங்கள், என அனுபவத்தில்தான் இதை சொல்கிறேன்.

படிக்க நேரம் இல்லை என்று சொல்ல்பவர்களின் தலையில் குட்டுங்கள். நீங்கள் பேருந்தில் பயணிக்கலாம், எங்கேனும் எவருக்கேனும் காத்திருக்கலாம், ஒரு டிவி சீரியலை தியாகம் செய்யுங்கள், முடியாவிட்டால் விளம்பர இடைவேளையில் படிங்கள், தினம் இரவு அரைமணிநேரம் தூக்கத்தை தள்ளி போடுங்கள். நான் toilet கு கூட புத்தகத்தை எடுத்துசெல்கிறேன், படிக்கும் புத்தகம் என்பது சரஸ்வதி என்றெல்லாம் சொல்லும் எனக்கு வாயதாற்போல் மனைவி வாய்த்திருந்தால், இந்த விசயத்தில் அவர்கள் பேச்சை கேட்காத bad pussycat ஆகா இருந்துவிடுங்கள்!

அப்படி இப்படி என்று கண்டிப்பாக உங்களால் ஒரு நாளில் அரைமணி நேரமாவது ஒதுக்க முடியும். கண்டிப்பாக படிங்கள்.

இப்போது நான் படித்துகொண்டிருப்பது மதன் எழுதிய கி.பி. கி.மு. - இந்த புத்தகத்தை ....ம்ம்ம் படிக்கலாம்.

0 Response to "வாசியுங்கள் நண்பர்களே..."

Post a Comment