மனிதம் தொலைந்த மனிதர்கள் - மறதி...

இந்த பகுதியில் அரசியலை பற்றி பேசகூடாது என்று எண்ணி இருந்தேன். மாயை, மந்திரஜபம் என்று இருந்துவிடலாம் என நினைத்திருந்தேன். ஆனால், இன்று நடக்கும் அரசியலை நினைத்தாலே, அசிங்கத்தை மேலே பூசியதைபோல ஒரு வித அருவருப்பை உணர்கிறேன். இருப்பினும் அந்த சாக்கடைக்கு மத்தியில்தான் நானும் வாழ்கிறேன் என்பதால் அதையும் கிளறதான் வேண்டியுள்ளது.

உணர்சிவசபடுவதில் நமக்கு இணை நாமே! அறிவுபூர்வமாய் எதையும் சிந்திபதென்பது வெறும்வயிற்றில் வேப்பெண்ணை சாப்பிடுவதுபோல.

நித்யானந்தா, கல்கி போன்றவர்கள் தவறு செய்தால்மட்டும் இத்தனை வன்முறை காட்டும் நமக்கு, கண்கூடாக அரசியல்வாதிகள் செய்யும் அக்ரமங்களுக்கு ஒரு சதவீதம்கூட ஆவேசபடாதது ஏன்?

இந்த போலிசாமியர்களால் பாதிக்கபடுவது அவர்களை நம்பி செல்லும் பக்தர்கள்தான் தவிர மற்றவர் இல்லை, ஆனால் நீங்கள் விலகியே இருந்தாலும் அரசியலில் இருபவர்களின் சுயநலனிற்காக அடித்தட்டு கடைகோடி பிரஜைவரை பாதிக்கவடுவதை யாரும் உணர்வதே இல்லை!!

பாலம் கட்டுவதிலிருந்து பள்ளிகூட ஆய நியமனம் வரை அனைத்திலும் ஊழல் லஞ்சம் என்று வாங்கி வெளிநாட்டு வங்கிகளில் பூட்டி வைத்திருகிறார்கள், அவர்களின் எள்ளு பேரனின் கொள்ளு பேரன் வரை உட்கார்ந்து சாபிட்டாலும் தீராத அளவு சொத்துகளை!!!

இவர்கள் போடும் எச்சில் எலும்புக்காக உயிரை கொடுக்கும் (எடுக்கும்) அடியாட்கள் படை வேறு!!!

ஊழல் செய்யும் அதிகாரியோ அல்லது அரசியல்வாதியின் வீட்டை நொருக்குங்களேன், உங்களின் வீரத்தை மெச்சுகிறேன்...

'அமைதிப்படை' திரைபடத்தில் ஒரு அண்ட்ராயர் சண்டையில் அனைத்தையும் மறந்துவிடுவதுபோல எல்லாவற்றையும் மறந்துவிடும் வேடிக்கை மனிதர்கள் நாம்!!!

கச்சதீவை மறந்தோம், காவேரியை மறந்தோம், முத்துக்குமார் மறந்தோம், ஸ்பெக்ட்ரம் மறந்து, இலங்கை அப்பாவி தமிழர்கள், ராமேஸ்வரம் மீனவர்கள், ஒகேனக்கல், முல்லை பெரியார், பிரபாகரன், விலைவாசி, மின்தடை, சரத்பவார், அஜீத்தின் ஆதங்கம் வரை மறந்துவிட்டோம். அடுத்த பெனாகரத்தில் இந்த நித்தியானந்தம் மறந்து, எந்திரன் வந்ததும் எல்லாமும் மறந்துவிடும்!!!!!!!

வாழ்க ஜனநாயகம்.....

1 Response to "மனிதம் தொலைந்த மனிதர்கள் - மறதி..."

  1. Jerry Eshananda says:
    March 4, 2010 at 5:38 PM

    / எந்திரன் வந்ததும் எல்லாமும் மறந்துவிடும்!!!!!!!//
    சுத்தியல எடுத்து மண்டையில போட்ட மாதிரி

Post a Comment