மாயை - பகுதி 1

இதை எழுதுவதற்கு சில கணங்களுக்கு முன் வெளியே உலாவிகொண்டிருந்தேன்.
மாலை பொழுதின் கடைசி நிமிடங்கள்....
வளர்பிறை நிலவின் வெளிச்சத்தை மெல்லிய மேகதிடல்கள் தடுக்க போராடி தொற்றுகொண்டிருந்தது...
'மங்கியதோர் நிலவினிலே...' என்ற பாரதியின் வரிகள் நினைவை வருடியது...
மிக மெல்லிய மழை சாரலில், காற்றில் குளுமை கூடியிருந்தது...
வீட்டின் பின்புறம் ஜாதி முல்லை கொடி ஒன்று உண்டு. கொடி முழுக்க பூக்கள் சின்னதாய் சிரிக்க துவங்கியிருந்தது. முல்லை கொடியின் கரும்பச்சை இலைகள், மெல்லிய இருளில் இன்னும் இருட்டாய் தெரிய, அதன் மீது சிறிய முத்துக்களாய் இந்த பூக்களை பார்ப்பதற்கு, வானத்து நட்சத்திரங்கள் தரையில் சிதறிக்கிடப்பதுபோல் இருந்தது...
பூக்க துவங்கிய முல்லையின் வாசமும் வீச துவங்கியது அந்த நிமிடத்தை இன்னும் பரவசப்படுதியது...
எத்தனை அழகான மாலைபொழுது...
இந்த காட்சி, வாசம், நிலவொளி, தென்றல், எல்லாம் மாயை என்றால் ஒப்புகொள்ளமுடியுமா!!!
இது மட்டுமல்ல, இதோ இந்த வார்த்தைகள், அவற்றை உங்களுக்கு காட்டும் இந்த கணினி, அமர்ந்திருக்கும் நாற்காலி, இதை எழுதும் நான், படித்துகொண்டிருக்கும் நீங்கள், யாவும் மாயை என்றால் நம்புவீர்கள!!!
எப்படி நம்புவது!!
இதோ என் காதல் மனைவி, ஆசை குழந்தைகள், அவர்களின் மழலை, இவை எல்லாம் என் முன் விரிந்திருக்கும் சுவர்க்கம்... இவை எப்படி மாயை என்பேன், என்று ஆனானப்பட்ட பாரதியே "நிற்பதுவே நடபதுவே...." என்று பாடினார்....
அந்த வரிகள் நினைவில் இருக்கிறதா?! ".....வானகமே இளவெயிலே மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின்நீரோ? வெறும் காட்சிப்பிழைதானோ? போனதெல்லாம் கனவினைபோல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?...."
இப்படி பாரதியே நம்ப மறுத்த இந்த மாயை, ஒரு நிதர்சன உண்மையே!!!

2 Response to "மாயை - பகுதி 1"

  1. Shakthiprabha (Prabha Sridhar) says:
    November 5, 2009 at 9:54 PM

    மேலும் தொடருங்கள். உங்கள் பதிவு மிகவும் ஆழமான பதிவு.

  2. arivujeevi says:
    January 17, 2014 at 3:18 AM

    nice pls continue who is god and space,meditation ects..

Post a Comment