stroke-ம் சாமியாரும்...

இருபது நாட்களுக்கு முன் அப்பாவிற்கு stroke... இடது மூளையில் ரத்த கசிவு... லேசான stroke தான்... அன்றிலிருந்து stroke பற்றிய எனக்கு கிடைத்த அனுபவங்கள் அலாதியானது... பார்க்கவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மருத்துவமுறையை சொல்வார்கள்... சிலர் திணிப்பார்கள்... இதில், நேற்று வந்த ஒரு சாமியார் பற்றி சொல்லியேஆகவேண்டும்...
சிவா சண்முக சுந்தர பாபுஜி...

அருள்வாக்கு சொல்பவராம்... யாரையும் அவர் வீடு வரை சென்று பார்ப்பதில்லையாம்... வீடு வரை வந்தது எங்கள் அதிர்ஷ்டமாம், அவரே சொன்னார்!!!!

பாபுஜி வந்த அன்று காலை அப்பாவின் நிலையை சொல்லியாகவேண்டும்...

அலோபதி மருந்தை, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த அடுத்த நாளே நிறுத்திவிட்டோம். நாட்டு மருந்துதான். நாளுக்கு நாள் முன்னேற்றம்தான். ஒருவர் பிடித்துக்கொள்ள மெல்ல நடப்பார். முந்தைய நாள்தான் வைத்தியர், அப்பாவை பரிசோதித்து நரம்புகள், மூட்டுகள் எல்லாம் ஆரோக்கியமாக உள்ளது என்றார். இன்னும் ஒருபக்கம் முழுமையாக உணர்சிமட்டும் திரும்பவில்லை. ஒரு பக்கத்து உடல் பாரம் வெகுவாக குறைந்துள்ளது. இனும் ஓரிரு வாரங்களில் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்த நிலையில் தான் சிவா சண்முக சுந்தர பாபுஜியின் வரவு.

பாபுஜி வரும்போது வீட்டில் அப்பா மட்டும் தனியாக இருந்தார். நான், காலையில் கொஞ்சம் தியானம், பிராணாயாமம், செய்வது வழக்கம். நேற்று ஒரு வேலையாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினால், வாசலில் ஒரு omni van, முன் வராண்டாவில் சில காவி வேஷ்டிகள் , உள்ளே நுழைந்தால், இன்னும் கொஞ்சம் காவிகளுக்கு நடுவே அப்பா நின்றுகொண்டிருக்கிறார். பக்கத்தில் அந்த சாமியார், "கையை தூக்கு... கையை இறக்கு.... காலை ஓதரு...." - கண்களில் மிச்சம் இருந்த தூக்கத்தோடு, என்ன நடக்கிறது என்று புரிந்தும் புரியாமலும் அப்பா அவர் சொன்னதை செய்துகொண்டிருந்தார். கண்களை மூடிக்கொள்ள சொல்லி, கழுத்தில் நெட்டி எடுத்தார். கைகளையும் கால்களயும் பிடித்து பார்த்துவிட்டு, "எல்லாம் நல்ல இருக்கு, நான் எங்க போனாலும் அரைமணி நேரம்தான், treatment -ஐ முடிச்சுடுவேன். இன்னும் பத்து நிமிஷம், உங்க அப்பாவை சரி பண்ணிட்டு கிளம்பிடுவேன்" என்றார்.

நான், தம்பியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, தியானத்திற்கு சென்றுவிட்டேன்.

சாமியார், அப்பாவை "வா நடக்கலாம்" என்று, வீட்டிற்கு வெளியே அழைத்து சென்று, இப்படி நட, அப்படி நட என்று அதற்கும் இதற்கும் நடக்கவைத்துகொண்டிருந்தார். Hospital -இல் இருந்து வீட்டிற்கு வந்தபின், இப்போது தான் வெளியே வந்திருக்கிறார் என்று ஒருவர் சொல்ல, சாமியார் முகத்தில் பெருமிதம், ''எப்படி!? நான் வந்துதான் உன்னை வெளியே நடக்கவைத்தேன்" என்று சொல்லியும் காட்டினர். "உன் அண்ணன் எங்கே? கூப்பிடு" என்று சொல்ல, "சாமி கும்பிடுகிறான்" என்று சொல்லி இருக்கிறான். அதற்கு "தம்பி, சீக்கிரம் வா, நேரம் ஆகுது, நான் போகனும்" என்று கூப்பிட்டார். த்யனதிற்கும் ப்ராணயாமத்ற்கும் இடையில் வெளிப்பட்ட நான், "நான் வர இன்னும் பத்து நிமிஷம் ஆகும்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். இது அவர்க்கு அவமானமாய் போய்விட்டது போல. அதற்கு பின் அவர் ஏதும் பேசவில்லை. அவசர அவசரமாக புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த நடையை அப்பா வீட்டிற்கு உள்ளேயே நடந்து கொண்டிருந்தாரே, ஒருபக்கம் இன்னும் உணர்ச்சி வரவில்லையே, அதை பத்து நிமிடத்தில் வரவைத்திருந்தால், அவர் வித்தை தெரிந்தவர்தான் என்று ஒப்புகொள்ளலாம். இவை எல்லாம் பேசுவதற்குள் ஓடிவிட்டார், ஆம் ஓடிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

கழுத்தில் சில ருத்ராட்ச மாலை(கள்), சிவலிங்க doller, பானை வயிறு, நெஞ்சுவரை தூக்கி கட்டிய காவி வேஷ்டி, காவி துண்டு, வெட்டாத முடி, தாடி, நெற்றியில் பட்டை, பெரிதாய் குங்கும போட்டு, பூநூல் (அதன் தத்துவம், இப்போது பல பிராமணர்கு கூட தெரிவதில்லை!) இது தான் இபோதைய பெரும்பாலான சாமியார்களின் வேஷம். இவர்களுக்கு எப்படியும் ஏதாவது ஒரு வித்தியாசமான கலை தெரிந்திருக்கும், இந்த பாபுஜிகு, கொஞ்சம் நரம்பு வித்தை, அதாவது, வர்மகலை. அதுவும் கொஞ்சம்தான். இது போன்றவர்களிடம்தான் நெறைய பேர் போய் விழுகிறார்கள், குறிப்பாக பெண்கள். தயவு செய்து இது போன்ற சாமியார்களை நம்பாதீர்கள். இவர்களும் நம்மை போன்ற மனிதர்கள்தான் என்பதை நம்புங்கள். இவர்களுக்கும் பசிக்கும், மலம் போகும், காய்ச்சல் வரும், இவர்களயும் கொசு கடிக்கும், கனவில் நயன்தாரா வருவாள், எல்லாம் இருக்கும்.

எனக்கு தெரிந்த கடைசி யோகி, காஞ்சி பெரியவர்தான். எந்த யோகிக்கும் தொப்பை இருந்ததில்லை. இப்போது உள்ள யாரும் யோகத்தை கற்றுத்தருவதில்லை. உண்மையான தியானம் கூட இப்போதிருக்கும் பல சாமியார்களுக்கும், மடாதிபதிகளுக்கும் தெரிவதில்லை. அவர்களை பொறுத்தமட்டில் சாமி என்பது ஒரு தொழில். புகழ், பணம், மரியாதை தரும் சொகுசான தொழில். அவ்வளவே.



நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

- திருக்குறள், 276.

1 Response to "stroke-ம் சாமியாரும்..."

  1. தங்க முகுந்தன் says:
    July 19, 2009 at 7:56 PM

    இறுதிப் பந்தியை வாசிக்கும்போது கண்கள் கசிந்தன அந்த மகா பெரியவரின் பெயரைக் கேட்டதுமே மனதில் ஒரு தனியான உணர்வு ஏற்படுகிறது!

Post a Comment