தந்தை சொல்....

தாயிற்சிறந்த கோவிலும் இல்லை... தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை......

உள்ளங்கை பார்க்க கண்ணாடி தேவையா!! இந்த வரிகளுக்கு விளக்கம் தேவையா!! என்று நீங்கள் நினைக்கலாம். பொதுவாக, நமக்கு வேதாந்தங்களும் தத்துவங்களும் ஆன்மிக உண்மைகளும் இலைமறை, காய்மறையாகவே சொல்லப்பட்டிருகிறது. அதில் இந்த வரிகளும் விதிவிலக்கல்ல.

இந்த உலகத்தில் ஜனிக்கும் ஜீவன் முன்வினை காரணமாக பிறகின்றது. அந்த ஜீவன், தாயின் கர்பப்பையில் இருக்கும் போது அந்த ஜென்மத்தின் வினைகள் ஆரம்பித்திருப்பதில்லை. வினைகள் இல்லாததால் புண்ணிய பாவங்கள் இல்லை. புண்ணிய பாவம் அற்ற ஆத்மா, பரமாத்மாவிற்கு நிகரானது. அப்படி பட்ட தெய்வம் இருபதால்தான் தாயின் கர்பப்பையை கருவறை என்றும் சொல்வார்கள். கோவில் கருவறையை கூட அசுத்தம் செய்யமுடியும், ஆனால் அன்னையின் கருவறையை அப்படி செய்யமுடியாது. இதை குறிபிடுவதுதான், 'தாயிற்சிறந்த கோவில் இல்லை'.

தந்தை சொல் மிக்க மந்திரம்?!

இங்கு தந்தை என்பது சிவபெருமானை குறிக்கிறது . 'நமசிவய' எனும் பஞ்சாச்சர மந்திரம்தான் தந்தை சொல். அந்த பஞ்சாச்சர மந்திரத்தைவிட உயர்ந்த மந்திரம் இல்லை என்பதுதான், 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை'.

பஞ்சாட்சர மந்திரம் எப்படி உயர்வானது என்பதை புரிந்துகொள்ள, மந்திரஜபம், குண்டலனி, இத்யாதிகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும்... அவைகளையும் சொல்கிறேன், பொறுத்திருகள்....

0 Response to "தந்தை சொல்...."

Post a Comment