மாயை - பகுதி 3

உண்மையான உண்மை, பொதுவான உண்மை, பொய்யான உண்மை என்று மூன்று விதமான உண்மைகள் இருப்பதாக சொல்லி அதற்க்கு விளக்கமும் தருவர் டாக்டர் அறிவொளி, கேடிருக்கிறீர்களா!?

உண்மையான உண்மைக்கு விளக்கம் தேவை இல்லை. சத்தியமானவை எல்லாம் உண்மையான உண்மைகளே.

பூமி உருண்டையாக இருக்கிறது என்பது நமக்கு எப்படி தெரியும்? நம் பார்வைக்கு அவை தட்டையாக தானே இருக்கிறது!! விண்வெளிக்கு சென்று பார்த்து சொல்கிறார்கள், புகைப்படங்களை காட்டுகிறார்கள், விளக்கங்கள் தருகிறார்கள். அதனால் நம் பார்வைக்கு தட்டையாக தெரிந்தாலும் இந்த பூமி உருண்டை என்பதை நம்புகிறோம். இது பொதுவான உண்மை!!

நம் பூமி 71% நீராலும் மீதி 29% சதவீதம் மட்டுமே நிலத்தால் ஆனது என்கிறார்கள்- விஞ்ஞானிகள் உட்பட. சரி, அந்த 71% நீரின் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து உள்ளே இறங்குவோம், உள்ளே உள்ளே உள்ளே என்று சென்றுகொண்டே இருந்தால் கடைசியில் தட்டுபடுவது நிலம்!!! இந்த கூற்றுபடி 29% நிலம் என்பது பொய் என்று ஆகிறது அல்லவா!!? வேண்டுமானால், நீர் நிறைந்திருப்பது பள்ளமான நிலத்தில் என்று சொல்லிகொள்ளலாம். மற்றபடி இந்த பூமி 100% நிலத்தால்தானே ஆனது!! இதைதான் பொய்யான உண்மை என்று திரு.அறிவொளி சொல்லுவார்.

அவர் சொல்லுவது இருக்கட்டும், நீ என்ன சொல்ல வருகிறாய் என்று கேட்பது காதில் விழுகிறது. சொல்கிறேன்.

நம்மை ஆள்வது நம் மனம் என்று நினைத்துகொண்டிருந்தால் அது பொதுவான உண்மை. நம் இந்த்ரியங்கள் சொல்வது எல்லாம் நிஜம் என்று நினைப்பது பொய்யான உண்மை. மனம் என்பது முதலமைச்சர் என்று வைத்துகொள்வோம். கண், காது, மூக்கு, நா, ஸ்பரிசம் என்ற பஞ்ச இந்த்ரியங்கள் - அதிகாரிகள். முதல்வர், அதிகாரிகள் தரும் தகவல்களை அப்படியே ஏற்று ஆட்சி செய்தால், மறைமுகமாக அந்த ஆட்சி அதிகாரிகள் கையில் சென்றுவிடும்!! மிக பெரும்பாலாக நாம் அனைவரும் இந்த்ரியாங்களின் கட்டுபாட்டிருக்கு உட்பட்ட முட்டாள் முதலமைச்சர்களே. நம்மை அறியாமலே நாம் இந்த்ரியாங்களின் இச்சைக்காக வாழ்பவர்களாகிறோம்.

இது நம் உடல் தானே!! எங்கே, பசி அற்று சில காலம் இருக்க சொல்லுகள்!! சுவாசம் இன்றி சில மணிநேரம் இருக்க சொல்லுகள்!! ருசியான உணவை கண்டால் நம்மை அறியாமலே நா ஊரும்!! வெறும் வார்த்தைகள் கூட ரத்தத்தை கொதிக்க செய்து, கொலை கூட செய்ய தூண்டும். யோசித்து பாருகள், ஒரு நாளில் எத்தனை விசயங்கள் நம்மை மீறி நடகின்றது என்று. உங்கள் பேச்சை உங்கள் உடலை கேட்காத பொது, மனைவி எங்கே கேட்க்க போகிறாள்!!

இந்த இந்த்ரியங்களை கட்டுபடுத்தி, நம் மனதையும் உடலையும் ஆட்சி செய்ய எத்தனயோ யோகா நெறிகளை கற்பித்தார்கள், நம் முன்னோர்கள். பதஞ்சலி முதல் விவேகனந்தர்வரை இதை பற்றிய தங்கள் அனுபவகளை எழுதிவைத்தார்கள். நாம் இதை படிக்கவாவது செய்கிறோமா?!

இப்போது மாயையை கொஞ்சம் நெருங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்னும் கொஞ்சம் அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.

2 Response to "மாயை - பகுதி 3"

  1. Anonymous Says:
    December 9, 2009 at 12:19 AM

    Migavum azhamana karuthukalai solgireergal. Boomiyin neer parapu nila parupaodu ungal karathukalai sonna vidham migavum arumai. Thodarungal.....

  2. Shakthiprabha (Prabha Sridhar) says:
    December 9, 2009 at 5:31 AM

    :)

Post a Comment