கவிதை என்பது...

கனவுகள் இல்லா வயதில் காதல் மலர்ந்து
துடிக்கும் வயதில் காசை வெறுத்து
வாழும் வயதில் காமம் வென்று
துவளும் பல அவமானம் தாங்கி
விலகி மெல்ல இறை நாடி
மூலாதாரம் மலர்ந்து
தண்டுவடம் சிலிர்த்து
போட்டொளி பூத்து
கடவுள் உணர்ந்து
வாழ்க்கை தெளிந்து
தன்விதியை தானே
விதிக்கும் மேலோனாய்...
ஏன் இவை எல்லாம்
என்ற கேள்வியில்
மெல்ல அடங்கியது 'நான்'..
நேசம் பாசம்
வேஷம் துவேசம் - என
எல்லாவற்றையு வேடிக்கை பார்த்து
சும்மா கிடக்கிறது மனம்...

சில சமயங்களில் கவிதைகளும் எழுதுவதுண்டு...

கதை எழுத சோம்பேறித்தனம், அல்லது பொறுமை இல்லாதவர்கள் தான் கவிதை எழுதுவார்கள் என்று ஒரு எழுத்தாளர் எழுதி படித்திருக்கிறேன். எனக்கு அதில் உடன்பாடில்லை. கவிதை என்பது அடர்த்தியான உணர்சிகள் நிரம்பிய உள்ளங்கை அளவு உலகம்! சில கவிதைகளின் தாக்கத்தில் இருந்து விடுபட சுலபத்தில் முடியாது, சில சமயம் நாட்கள் கூட ஆகலாம்.

எழுத நினைப்பது உண்மையாகவே எழுதுபவர் மனதை ஆழமாக பாதித்திருந்தால், அந்த பாதிப்பு கவிதையின் ஒவ்வொரு வார்த்தையாலும் உள்வாங்கப்பட்டு படிப்பவரின் மனதின் ஆழத்தை சலனபடுத்தும்.

யார் எழுதியது என்று தெரியாத எத்தனயோ கவிதைகள் இன்னும் என ஞாபக கோப்புகளில் இருந்து மறையாமல் இருக்கும் காரணம், அதன் ஆழம்!! இலக்கனங்கள் அல்ல.

ராமாயணம்
தந்தைக்கு
ஆயரம் ஆயரம் மனைவிகள்
ஒருத்திமீதும்
சந்தேகம் இல்லை!
மகனுக்கோ
ஒரே ஒரு மனைவி
ஆயரம் ஆயரம் சந்தேகங்கள்!!


மரங்கள் மராங்கலாய்..
பறவைகள் பறவைகளாய்..
மிருகங்கள் மிருகங்களாய்..
மனிதன் மட்டும்
இதில் எதாவது ஒன்றாய்!


மரத்தை நாமும்
நம்மை மரமும்
அழித்துக்கொள்ள
ஒரு நாள்
எல்லாமும் அழிந்துபோகும்
இந்த கவிதை
வரிகளை தவிர...


இந்த நிமிடம்
நீ என்ன செய்து கொண்டிருப்பாய்
என்று சிந்திப்பதிலேயே
போய் விடுகின்றன
என எல்லா நிமிடங்களும்...


சோகம், சந்தோஷம், காதல், இன்னும் பொழுது போகாததை எல்லாம் கவிதையாய் எழுதினேன்.

நண்பர்களுடன் பேசியாயிற்று..
இன்றைய செய்திகளை புரட்டியாயிற்று..
தொலைக்காட்சி தொடர்கள் சலித்தாயிற்று...
தூங்கமலேயே படுக்கை விரிப்பை
கசக்கியாயிற்று...
கவிதை கூட எழுதியாயிற்று..
சமயம் புரியாமல்
சம்பவங்கள் மட்டும்
வேகமாக கடந்து போகின்றது..
நேரம்தான் நகராமல்
இம்சிக்கிறது...

'பாம்பு' என்ற கவிதை உண்மையில் வேறு வழியே இல்லாமல் சிலர் ஒரு பாம்பை அடித்து கொன்றபோது தோன்றியது!! அந்த கவிதையில், பாம்பு, மனிதன் இரண்டிற்கும் பதில் இந்தியன் பாகிஸ்தானியன், தமிழன் சிங்களவன், என்று எப்படி மாற்றினாலும் பொருந்திவரும்!!

ஆனால் நான் சந்தித்த, பலரால் எழுத்தாளர்/கவிஞர் என்று ஒப்புகொள்ளபட்ட சிலரால் நான் எழுதியவற்றை குறைகள் அற்ற கவிதை என்று ஒப்புகொள்ளபட்டதில்லை!! ஆரம்பத்தில் கவலைபட்டாலும், பின்னர் அதை பொருட்படுத்தியது இல்லை. அவர்கள் சொல்லும் எதுகை, மோனை, சீர் எல்லாம் மரபு கவிதைகளை அலங்கரிக்கட்டும். நம் கவிதைகள் மனதை மட்டும் தொட்டால் போதும் என்று விட்டுவிட்டேன்!!

மரபு கவிதைகளில் வெண்பா உரிச்சீர் இயற்சீர் வேண்டலை வெண்சீர் வேண்டலை இன்னும் ஏதேதோ. இதில் கட்டளை கலித்துறை என்பது நான்கு அடிகள் இருக்கவேண்டும், ஒவொரு அடியும் நெடிலடி என்று சொல்லப்படும் ஐந்து சீர்கள் கொண்டும், இவைகளில் வெண்சீர், இயற்சீர் வெண்டளைகள் கொண்டிருக்கவேண்டும். போததற்கு அடியில் ஒற்று எழுத்துகளை (புள்ளி வாய்த்த எழுத்துகள், க், ச்..) நீக்கி எண்ண பதினாறு எழுத்துகள் இருக்கவேண்டும், முதல் எழுத்து நெடிலாக இருந்தால். குறிலாக இருந்தால் பதினாறு இருக்கவேண்டும். இதை எல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று அந்த பக்கம் போவதில்லை.

மனம் முழுக்க பாரம்தான்
பகிர்ந்துகொள்ள நட்பு வேண்டேன்
இறக்கி வைக்க துணையும் வேண்டேன்
என்னது என்னுளே கரையட்டும்
கரையும் வரை
மடி வேண்டும்
தலை சாய்க்க..

இந்த கவிதையை படித்த பலர் எழுதிவைதுகொண்டு மனதில் பாரமாய் இருக்கும் பொது படிப்பேன் என்று சொன்னபோது எனக்கு கொஞ்சம் கர்வமாக இருந்தது.

தெளிந்த வானம்...
நிறைந்த நிலவு...
மலர்ந்த முல்லை...
இருந்தும்
இரவில் நிறைவில்லை...!
நீ இல்லை..