கடவுளை தேடி... -5

கடந்த அத்யாயத்தில் எழுதியவற்றின் சாத்தியங்களில் சந்தேகம் உள்ளவர்களுக்கு  ஒரு சம்பவத்தை பகிர்கிறேன்..

இரண்டாம் உலக யுத்தம் நடந்த சமயத்தில், தெற்கு பசிபிக் கடலில், உலக நாகரிகத்தின் நிழல் கூட படியாத ஒரு தீவினில், நேசப்படை, ஆயுத தளவாடங்களை தேக்கிவைக்க உபயோகித்தனர். மனிதர்கள், விமானத்தில் வருவதையும் போவதையும் அந்த தீவில் வாழ்துவந்த பழங்குடி இனத்தவர் கவனித்தனர். புதிய மனிதர்களின் உடை, ஆயுதங்கள், பறக்கும் ஊர்திகள் எல்லாம் அந்த பலகுடியினரின் கற்பனையில் கூட இடம்பெறாதவை.

போர் முடிந்ததும் தளவாடங்கள் யாவையும் எடுத்துக்கொண்டு நம்மவர்கள் ஊர் திரும்பி சில காலங்களுக்கு பின், அங்கு சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பு காத்திருந்தது.

அங்கிருந்த பழங்குடியினர், வானத்தில் இருந்து வந்த மனிதர்கள் கடவுளர் என்று நம்பிக்கொண்டு இருதனர். வானத்தில் ஏதேனும் விமானம் தென்பட்டால் அதை விழுந்து வணங்கி வந்துள்ளனர். அந்த தீவில் கிடைக்கும் மூங்கில், நார், கோடி போன்றவைகளைகொண்டு விமானம் போல் மாதிரியை உருவாக்கி, இதை கண்டு கடவுளர் மீண்டும் நம் தீவிற்கு வரமாட்டார்களா என்று தினம் வானம் பார்த்து காத்திருந்தனர்.

இது தான் மனித மனம்...

சில நுற்றாண்டுகளுக்கு முன்புவரை, தொலைக்காட்சி என்பது கற்பனைக்கு எட்டாத விஷயம்... அந்த காலகட்டத்தில், அதை பார்த்திருந்தால் என்னவென்று சொல்லிருபோம்..... தொலைக்காட்சி என்ற??
மாய கண்ணாடி என்றுதானே சொன்னோம்!!!!!!!!

சிவலிங்கத்தின் உருவகத்தை பற்றி எங்கேனும் படித்தோ, கேள்விபட்டோ இருகிறீர்களா?

ஆற்றல் உருவாக்கும், விசையை உருவாக்கும், சக்தியை உருவாக்கும் யாவும் இந்த வடிவத்தில்தான் இருக்கும்!!! கவனிக்க, "சக்தியை உருவாகும்" - சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இலையேல் சக்தி இல்லை என்று சொல்வது மரபு. சரி, விசயத்திற்கு வருவோம். ஆற்றலை உருவாகும் யாவும் இந்த வடிவத்தில்தான் இருக்கும் என்று சொல்லுவதைவிட, இந்த வடிவத்தில் இருந்தால்மட்டுமே அங்கு ஆற்றல் உருவாகும் என்பதுதான் நிதர்சனம். நம் TVS XL என்ஜின் முதல் அணுஉலைவரை அனைத்தும் லிங்க வடிவத்தில் இருப்பது பார்த்தலே புரியும்.

கருவறையில் லிங்கம் இருக்கிறது, மேலே கோபுரம். கொஞ்சம் யோசித்துபாருங்கள் மக்களே. கோபுரங்கள், இன்றைய ராக்கெட்-ஐ நினைவுபடுத்தவில்லையா? ராக்கெட்டின் (கோபுரம்) கீழே என்ஜின(சிவலிங்கம்), அப்படியாக ஏன் இருக்ககூடாது!!?? இதை பற்றி ஆராய்ச்சி செய்ய நம்மவர்கள் யாரேனும் ஆராயலாம்..


முக்கியமான விஷயம், கோபுரங்களுக்கு "விமானம்" என்றும் பெயர் உண்டு........

கோவில்களை பற்றி என்னிடம் வேறொரு கோட்பாடும் இருக்கிறது, அதை மற்றொரு தருணத்தில் பகிர்கிறேன்...

கடவுளை தேடி... -4

தற்போது இருக்கும் விஞ்ஞான வளர்சிகள் சற்றும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காலத்தில் நாம் இருபதாக கற்பனை செய்துகொள்வோம்....
தற்போது நீங்களும், நானும் நண்பர்கள்... இயற்கையை மட்டுமே நமக்கு தெரியும்.. நாம் இருவரும், ஒரு சிறு குன்றின் மீது வேட்டையாட செல்கிறோம்... உணவை தேடி இருவரும் பிரிந்து செல்கின்றோம்....
நான் மலையின் உச்சிக்கு சென்றுவிட்டேன்....

அங்கு ஒரு பறக்கும் வாகனம் ஒன்று வந்து இறங்குகிறது - நாமே இன்று புதியதாக ஒரு கிரகத்திற்கு சென்றோமானால் தரை இறங்க பொதுவான எச்சரிக்கை காரணமாக மேடான பகுதியைதான் தேர்ந்தெடுப்போம். அப்படியாக வந்து இறங்கிய அந்த வாகனதில் இருந்து ஒரு ஆணும் பெண்ணும் வருகிறார்கள். அவர்கள் இருவரும் தலைகவசம், மற்றும் கையில் ஏதோ நீளமான ஒரு கொள், ஏதேனும் தொலைதொடர்பு சாதனமாகவும் இருக்கலாம், அல்லது ஆயுதம். தலைகவசதிலும், உடல் கவசத்திலும் சில ஒளி அமைப்புகள். வந்தார்கள்... சுற்றி பார்த்தார்கள்... சென்றார்.....

பார்த்த எனக்கு பெரும் பிரம்மிப்பு... அதுவரை அப்படி ஒரு பறக்கும் வாகனத்தை நான் இதுவரை கண்டதில்லை... வாகனம் என்ற வார்த்தைக்கூட பொருள் தெரியாது... இடியோசையொடும் மின்னல்  போன்ற ஒளியோடும்   வந்தது அப்படியே சென்றுவிட்டது....

அரவம் கேட்டு நீங்களும் குன்றின் உச்சிக்கு வருகிறீர்கள்... என்ன நடந்தது என்று கேட்கிறீர்கள்...

''ஏதோ ஒன்று வானத்தில் இருந்து பெரிதாக பறந்து வந்தது'' 
''பறவையா?"
"பறவை போல ஒன்று.... ஆனால், பெரியது...."
"பெரிய பறவையா?.... மயில் போல???"
"ம்ம்ம்.... அப்படிதான்... அதில் மனிதர்கள் வந்தார்கள்"
"நம்மை போலவா?"
"இல்லை.... பிரகாசமாய்.... கையில் ஏதோ.... ஈட்டி போல...."
"நம் ஈட்டி போலவா?"
"இல்லை.... அதுவும் பிரகாசமாக இருந்தது...."
"ம்ம்...."
"தலையில் ஏதோ அணிதிருந்தர்கள்...."
"ஒ...."
"பிறகு மீண்டும் பறந்து சென்றுவிட்டார்கள்...."
.....

விஷயம் நாம் வாழும் கிராமத்தில் பரவுகிறது..... அங்குள்ள ஒரு பெரியவர், வந்தவர்கள் தெய்வங்கள் என்கிறார்..... செவிவழியாகவே கலங்கலாய் வலிமொளியபடுகிறது.... அந்த குன்றின் உச்சியில் தெய்வம் வந்து சென்றதால் புனிதமாக கருதபடுகிறது.... வந்து சென்ற இடதில் பூஜைகள் நடக்கிறது.... காலங்கள் கடந்து.... செவிவழி செய்தி காலத்திற்கும் சொல்ல படும் மனிதருக்கும் ஏற்ப திரிந்து, வான் ஊர்தி மயில் ஆகவும், வந்த தெய்வம் முருகன்னாகவும் அந்த குன்று பழனி என்றும் ஆகி இருக்கலாம்....

இது அதீத கற்பனை என்று நீங்கள் நினைக்கலாம்.... ஆனால், இவை நிஜமாக இருக்கும்பச்சதில் நமது இத்தனைநாள் புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் வேறு ஒரு கோணம் புலப்படும்.....

இப்படி ஒரு கோணத்தை பெரும்பாலானவர்கள் ஜீரணிக்கவே முடிவதில்லை.... ஆதலால், இதை மொத்தமாக புறக்கணிக்கலாம்....

கண்ணை மூடிக்கொண்டு கடவுளை வாங்குபவர்களுக்கு என் எழுதுக்கள் முட்டால்தனமாக படலம்..... இதுவரை சொன்னது ஒரு சின்ன உதாரணம்தான்... இன்னும்.....

தேடுதல் தொடரும்....


கடவுளை தேடி.. - 3

கடவுளை தேடும் பயணத்தில் நம் நண்பர்  ஒருவரின் எழுத்துகளையும் மனதில்கொள்வோம்...


உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு
தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு

கடவுளை தேடி... -2

கிருஷ்ணர் மற்றும் சால்வனுக்கும் இடையில் நடந்த யுத்தம்மும் அதிநவீன யுத்தம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்..

சால்வனின் வாகனத்தை பற்றிய வர்ணனையில், அது ஒரு பறக்கும் வாகனம் என்றும், ஒரு இடத்தை தாக்கிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் மற்றொரு இடத்தை தாக்கியதாகவும், அது மின்னல் போன்று அதீத வெளிச்சத்துடனும், இடியோசை போன்ற சதத்துடனும் தாக்கியதாகவும் புராணங்களில் உள்ளது. அதை கொண்டு துவாரகையின் பல மாட மாளிகைகளை சல்வன் தரைமட்டமாக்கினான்.

இதில் வரும் வர்ணனை இப்போது புதிராக இருக்கும் பறக்கும் தட்டை ஒத்திருக்கிறது. கண் இமைக்கும் நேரத்தில் இங்கும் அங்கும் செல்வது, அந்த வாகனம் ஒளியின் வேகத்தில் பயணித்தை காட்டுகிறது.

சல்வனை, கிருஷ்ணர் சக்திவாய்ந்த அம்புகளை தாக்கி அழித்ததாக சொல்வது, ஏவுகனையோ, 'ராக்கெட்லாஞ்சர்' - ரோ கூட இருக்கலாம்.

துவாரகை

குஜராத் அருகில், கடலில் எழுபது அடி ஆழத்திலேயே துவாரகையின் மிச்சங்களை சமீபத்தில் அகல்வாராச்சியில் கண்டெடுத்திருகிறார்கள். ஆராய்சியாளர்களின் கூற்றுப்படி, துவாரகை எனும் நகரம் 32000 வருடங்களுக்கு முன்பு உருவானதாகவும், 9000 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கியிருக்கலம் என்றும் சொல்கிறார்கள். அப்படியெனில் மகாபாரதகாலம் என்பது எப்போது?!

மகாபாரதம் என்பது வெறும் கதை என்பவர்கள் கவனத்திற்கு. அது வெறுமையாய் ஞாயிறுகிழமைகளில் தொலைக்காட்சி தொடர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல. அவை அனைத்தும் நிஜத்தில் நிகழ்தவைகள். வெகுகாலமாய் செவிவழியாகவே சொல்லப்பட்டதால் சில திரிபுகள் இருக்கலாம் அன்றி எவையும் மிகையல்ல.

என அறிவிற்கு எட்டியவரை, முதல் சோதனை குழாய் குழந்தை, துரியோதனன். முதல் க்ளோனிங் குழந்தை விநாயகர், முதல் சிரசுமாற்று அறுவைசிகிச்சைக்கு உட்பட்டவரும் அவரே. கர்ணன், மற்றும் பஞ்சபாண்டவர்களின் பிறப்பு இன்னும் அறிவிற்கு எட்டாதவைகளில் ஒன்றே அன்றி பொய் அல்ல.

இன்றைய விஞ்ஞானம் ஒப்புகொள்ளும் விஷயம், ராமாயண மகாபாரதத்தில் சொல்லப்பட்ட 'பிரமாஸ்திரம்' இன்றைய அணுகுண்டே. அணுகுண்டு வெடிப்பில் நிகழும் கதிர்வீச்சால் பாதிக்கபடவர்களின் முடிகொட்டிவிடும், நகங்கள் விழும் போன்ற நுணுக்கமான விஷயங்கள் கூட பிரமாஸ்திரம் பற்றிய குறிப்பில் உள்ளது. மகாபாரதத்தில் இந்த பிரமாஸ்திரம் உபயோகித்ததாக குறிப்பு உள்ளது.

இந்து சமவெளியில், 1922ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட , இறந்தவர்களின் மேடு என்று பொருள்கொண்ட 'மொஹென்ஜோடரோ'வை 1979ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேய விஞ்ஞானி ஆராய்ததில், அங்கு கதிர்வீச்சின் அளவு சாதாரண அளவைவிட அதிகமாக இருப்பதை கண்டுபிடித்தார். மற்றும் சில பாறைபடிவங்கள் கண்ணாடி போல் இருந்ததையும் கண்டார். மிக பெரும் வெப்பத்தால் மட்டுமே பாறை மற்றும் மணல் கூட உருகி பின் குளிர்விக்கபடும்போது அவை இப்படி கண்ணாடி போன்று உருமாறும். 1945-இல் மெக்சிகோவில் முதல் அணுகுண்டு சோதனை செய்தபோது, வெடிப்பு நிகழ்ந்த இடத்தில், மணல் கூட இப்படி கண்ணாடி போல் ஆனதைகண்டனர்.

அப்படியானால், மொஹென்ஜோடரோவில் நிகழ்ந்தது என்ன? அதனை கண்டுபிடித்தபோது, அதன் சாலைகளில் 40மனித எலும்புகூடுகள் ஒன்றை ஒன்று கைகோர்த்தபடி கிடந்தனவே, அவர்களின் மரணம் நிகழ்ந்தது எப்படி!? மகாபாரதயுத்தம் நடந்த இடங்களில் ஒன்றா அது??

"அப்போது, மகாவிஷ்ணு, பரமேஸ்வரன் எல்லாம் வேற்றுகிரகவாசிகள் என்று சொல்கிறாயா?" என்று என்னை யாரேனும் கேட்டால், ஆம் என்று சொல்வதற்கான வாய்புகள்தான் அதிகம் என்பேன்...

அப்படியானால் கடவுள் என்பது??

தேடுதல் தொடரும்....