மாயை - பகுதி 4

இந்த்ரியங்கள்... பொய்யான உண்மைகள்...

எண் ஜான் உடம்பில் சிரசே பிரதானம். காரணம், மூளை மட்டுமே அல்ல, ஐந்து புலன்களில் நான்கு புலன்கள் தலையில் இருபதாலும்தான்.

முன்பு சொன்னது போல இந்த புலன்கள்தான் அதிகாரிகள், இவைகள் காட்டும் உலகத்தைதான் நாம் பார்க்கிறோம், உணர்கிறோம், சிந்திக்கிறோம். புலன்கள் சொல்வது எல்லாம் உண்மையானவையாக இருக்கவேண்டும் என்று நிர்பந்தம் இல்லையே!!

நம் கண்ணை எடுத்துகொள்வோம், நாம் காண்பவை எல்லாம் மூளைக்கு பிம்பங்களாக நேரடியாக கொண்டுசெல்லப்படுவதில்லை. கண்ணின் திரையில் விழும் பிம்பங்கள் வேறொரு அலைவரிசையாக மாற்றப்பட்டு, நரம்புகள் மூலமாக மூளைக்கு கொண்டுசெல்லபடுகிறது. அங்கு நரம்புகள் கொண்டு வரும் சமிக்ஞைகளை கொண்டு காட்சிகள் புரிந்துகொள்ளபடுகிறது.

நம் பார்வைக்கு சில எல்லைகள் உண்டு. நம் கண்கள் காணும் எல்லாவற்றையும் சமிக்ஞைகளாக மாற்றுவதில்லை. நமக்கு தெரிந்து புறஊதா, எக்ஸ்-ரே போன்ற ஒளிகற்றைகளை கண்டுகொள்வதில்லை. இவைகள் தவிர மனிதனால் இன்னும் கண்டுபிடிக்கபடாத எத்தனை ஒளிகற்றைகள் இருக்கின்றனவோ!!

இது ஒரு புறம் இருக்கட்டும். Video Glass என்ற ஒரு வஸ்துவை பற்றி படித்ததுண்டா? பெரும்பாலும் இது Video Game விளையாட பயன்படுகிறது! அதை அணிந்துகொண்டால் நாமே அந்த விளையாட்டு தளத்திற்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். நம் கண்களை வேறு ஒரு கோணத்தில் சிந்தித்து பார்ப்போம். கண்கள் நமக்கு நிரந்தரமாக பொருத்தப்பட்ட Video Glass என்றால், இங்கு நம் கண்முன்பு நிகழும் நிகழ்வுகள் எல்லாம் முன்பே program செய்யப்பட்டவை என்று வைத்துக்கொண்டால்! இப்போது நாம் பார்த்துகொண்டு இருப்பது எல்லாம் நம் மூளைகுள்ளேயே இருக்கிறது என்றாகிறது!! நம் எதிரே இருக்கும் பிம்பங்கள் எல்லாம் உண்மையில் எதிரே இல்லை, நமகுள் இருக்கிறது. திருமந்திரத்தில் ஒரு இடத்தில், 27 நட்சத்திரங்களும் நம் தலைக்குள்தான் இருக்கிறது என்று திருமுலர் சொல்கிறார். இன்னும் வேதத்தில், அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது எல்லாம் அண்டத்தில், என்று வருகிறது. அதன் அர்த்தகளை இந்த கோணத்தில் சிந்தித்து பார்த்தல் எல்லாம் பொருந்தி வரும்!!

நிறைய குழப்பிவிட்டேனா?

குழம்பியவர்கள் இதை இத்துடன் நிறுத்திவிட்டு, PJ-யின் Lemon Tea ஐ ருசித்துகொண்டே கண்கள் மூடிகொண்டு பாலமுரளியின் எந்தரோ மகானுபாவுலு வோ, Michael Cretu இன் Mea culpa, Sadness யோ ரசியுங்கள், Iman maleki இன் ஓவியங்களை ரசியுங்கள், பாரதியின் 'கண்ணமா என் காதலி' ஐ படியுங்கள், மனம் நிதானத்திற்கு வந்தபின் மீண்டும் முதல் அத்தியாயத்தில் இருந்து ஆரம்பியுங்கள்.

குழப்பம் இல்லாதவர்கள் Video Glass இல் இருந்து தொடரலாம்...

நம்
கண்களை Video Glass என்று நான் சொல்வதற்கு சில சந்தேகங்களும், சாத்தியங்களும் இருக்கின்றன. முதல் சந்தேகம், நாம் பார்க்கும் காட்சிகள் எல்லாம் சரிதானா என்று ஒப்பிட்டு பார்க்க எந்த அளவுகோலும் இல்லை, அப்படி ஒரு அளவுகோலை பற்றி நாம் இதுவரை சிந்தித்ததும் இல்லை!! சிந்திக்கும் சாத்தியங்களும் இருந்திருக்கவில்லை!!! அப்படி ஒரு அளவுகோல் பற்றி சிந்தித்தாலும் அதற்கு சாத்தியம் இல்லை. காரணம், அதையும் இதே கண் கொண்டுதான் பார்க்கவேண்டும், இது குற்றவாளியே நீதிபதியாக இருக்க சொல்வதற்கு சமம்!!

அடுத்து, காணும் காட்சிகளை உருவாக்கும் சாத்தியங்கள்!

Schizophrenia போன்ற மனநோயாளிகளுக்கு ஏதேதோ பின்பங்களும், யாரோ பேசுவது போன்ற சப்தங்களும் கேட்குமாம். அவை எப்படி நிகழ்கின்றன!?

அந்த
உருவங்கள் வெளியே இல்லை, அவர்களுக்குள்ளேதான் உருவாக்க படுகின்றது. அவ்வளவு ஏன், கனவுகளில் வரும் உருவங்களை கண்ணால் காண்கிறோமா? மனதால் காண்கிறோமா என்று யோசித்து பாருங்கள்.

கண்களால் குறிப்பிட்ட அலைவரிசைக்குள் இருக்கும் ஒளிகதிர்களை மட்டுமே பார்க்கமுடியும், புற ஊதா, எக்ஸ்-ரே போன்றவை நம் சாதாரண கண்களுக்கு புலப்படாதவை. இதில் ஒன்றை மனதில் வைத்துகொள்ளுங்கள், இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கபட்ட கண்ணனுக்கு தெரியாத இவைகளை தவிர இன்னும் மனிதனால் கண்டுகொள்ளபடாத பல ஒளி அலைகள் இருக்கலாம். அப்படியொரு பரிணாமத்தில் வேறு ஒரு உலகமே நம்மை சுற்றி இயங்கிகொண்டிருக்கலாம். தேவலோகம், நரகம், கைலாயம், வைகுண்டம், போன்றவை நம்மை சுற்றியிய எங்கேனும் இருக்கலாம்!!! (தேவர்களுக்கு ஒரு நாள் என்பது நம் ஒரு வருடமாம், 6 மாதம் பகல், 6 மாதம் இரவு!! துருவங்களில் இந்த சூழல்தான் நிகழ்கிறது!!!)

கண்கள், காணும் காட்சியை சமிக்ஞைகளாக மாற்றி நரம்புகள் முலம் மூலைக்கு அனுப்புகிறது. ஒன்று செய்யலாம், அந்த சமிக்ஞைகளை நாமே உருவாக்கி நேரடியாக மூலைக்கு அனுப்பினால் கண் பார்காமலே ஒரு காட்சியை மூளை காணும் அல்லவா!!! இது ஏதோ என் கற்பனை என்று நினைக்காதீர்கள். Virtual Reality ஐ பற்றி படித்தவர்களுக்கு இது புரியலாம். இதை Sony நிறுவனம் முயற்சி செய்துகொண்டிருகிறது!!! கண்கள் மட்டும் அல்ல, நம் ஐந்து புலன்களையும் Ultrasonic ஓலி அலைகளின் மூலம் இயக்கும் ஆராய்ச்சி செய்துகொண்டிருகிறார்கள். அது வெற்றி பெற்றால், முப்பரிமாணத்தில் நமக்குள்ளேயே திரைப்படங்கள் ஓடலாம், அந்த திரைபடத்தில் நாமே கூட கதாநாயகனாக வில்லன்களிடம் சண்டை போடலாம், தமான்னாவின் கூந்தலை வாசம் பிடிக்கலாம், காதல் செய்ய சுவிசர்லாந்து போகலாம்!!!

இவைகளை இன்றைய விஞ்ஞானிகள் இபோதுதான் ஆராய ஆரம்பிதிருகிரார்கள், ஆனால் நம்மவர்கள் முன்னமே இதை சாதித்து இருகிறார்கள்!!! அது......

0 Response to "மாயை - பகுதி 4"

Post a Comment